Hosur | Bus Accident | 29 பேருடன் பள்ளத்தில் பாய்ந்த ஆம்னி பஸ் - சிக்கிய பயணிகள் நிலை? #Hosur #bus #accident #thanthitv ஒசூர் அருகே பேரண்டப்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஆம்னி பேருந்து, பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர நீரோடை பள்ளத்திற்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் 4 பேருக்குக் கால் முறிவு ஏற்பட்ட நிலையில், 29 பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.