தமிழ்நாடு

ஏரியில் வளர்ந்திருந்த கருவேலமரங்கள் : சுத்தப்படுத்தி இளைஞர்கள் சாதனை

ஒமலுர் அருகே இளைஞர்கள் இணைந்து ஏராளமான கருவேலமரங்களை அகற்றி ஏரியை சுத்தப்படுத்தியுள்ளனர்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஒமலுர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ளது வடமனேரி . 436 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் ஏராளமான கருவேலமரங்கள் காடு போல வளர்ந்து ஏரி நீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து விடுமுறை நாட்களில் ஜேசிபி மூலம் கருவேல மரங்களை முழுமையாக வெட்டி அகற்றியுள்ளனர்.

இதனால் மிகப்பெரிய அந்த ஏரி தண்ணீரை தேக்க தயார் நிலையில் உள்ளது. நீர் அருந்த அங்கு பறவைகள் வருவதால் அந்த ஏரியில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கருவேல மரங்களை அகற்றி ஏரியை சுத்தப்படுத்திய இளைஞர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு