தமிழ்நாடு

ஏரியில் வளர்ந்திருந்த கருவேலமரங்கள் : சுத்தப்படுத்தி இளைஞர்கள் சாதனை

ஒமலுர் அருகே இளைஞர்கள் இணைந்து ஏராளமான கருவேலமரங்களை அகற்றி ஏரியை சுத்தப்படுத்தியுள்ளனர்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஒமலுர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ளது வடமனேரி . 436 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் ஏராளமான கருவேலமரங்கள் காடு போல வளர்ந்து ஏரி நீரின்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து விடுமுறை நாட்களில் ஜேசிபி மூலம் கருவேல மரங்களை முழுமையாக வெட்டி அகற்றியுள்ளனர்.

இதனால் மிகப்பெரிய அந்த ஏரி தண்ணீரை தேக்க தயார் நிலையில் உள்ளது. நீர் அருந்த அங்கு பறவைகள் வருவதால் அந்த ஏரியில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கருவேல மரங்களை அகற்றி ஏரியை சுத்தப்படுத்திய இளைஞர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை