தமிழ்நாடு

பாதுகாப்பகத்தில் பொறிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டன

கடலூர் அருகே பாதுகாப்பகத்தில் பொறிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள், பூக்கள் தூவி கடலில் விடப்பட்டன.

தந்தி டிவி
கடலூர் அருகே பாதுகாப்பகத்தில் பொறிக்கப்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள், பூக்கள் தூவி கடலில் விடப்பட்டன. அரியவகை இனமாக கருதப்படும் இந்த ஆமைகள், ஜனவரி முதல் ஏப்ரல் வரை கடலோரத்தில் ஆயிரக்கணக்கில் முட்டைகளை இட்டுச் செல்கின்றன. காகம், நாய், நரி உள்ளிட்டவைகளிடம் இருந்து பாதுகாக்கப்படும் முட்டைகள் பொறிக்க வைக்கப்படுகின்றன. அவற்றை பாதுகாத்து வரும், தமிழக கடலோர பாதுகாப்புப் படை, வனத்துறை மற்றும் மீன் வளத்துறை இணைந்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. அந்த வகையில் பொறிக்கப்பட்ட ஆமை குஞ்சுகள் கடலுக்குள் நீந்திச் சென்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்