தமிழ்நாடு

வீட்டின் பத்திரத்தை தொலைத்த முதியவர் - போலீஸ் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

தந்தி டிவி

சென்னையில் மூத்த குடிமகனின் குறையை உடனடியாக தீர்த்து வைத்த, காவல் ஆணையருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் ராஜகோபாலன். 90 வயதான இவர், தனது வீட்டின் கிரைய பத்திரத்தை தொலைவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, ராஜகோபாலன், சென்னை பெருநகர காவல் ஆணையர் மின்-அஞ்சல் முகவரிக்கு, தனது தொலைந்து போன ஆவணங்களுக்கு, காவல்துறை சான்றிதழ் விரைந்து வழங்க ஆவண செய்யுமாறு கோரியிருந்தார். இதையடுத்து, காவல் ஆணையர் உத்தரவின் பேரில், குற்ற ஆவண காப்பகம் மூலம் உடனடி விசாரணை மேற்கொண்டு, காணாமல் போன வீட்டு பத்திரத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில், சான்றிதழ்களை பெற்ற மூத்த குடிமகன் ராஜகோபால், காவல் ஆணையருக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?