தமிழ்நாடு

மனைவி, மகனை எரித்துக் கொன்ற முதியவர்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் சகரியா. 60 வயதான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு, சொந்த ஊரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும், கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி மெர்சியுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், சில தினங்களுக்கு முன்பு, சகரியாவின் மூத்த மகன் வென்றிக்கு, திருமணம் நடந்திருக்கிறது. இதில் சகரியாவுக்கு உடன்பாடு இல்லாததால், திருமணத்திற்கு செல்லவில்லை என தெரிகிறது. மேலும், மனைவி மெர்சியுடன் சகரியா தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். குறிப்பாக, சம்பவத்தன்று மனைவியுடன் சண்டையிட்ட சகரியா, மனைவி மற்றும் சண்டையை தடுக்க வந்த இளைய மகன் ஹார்லி வினோ மீது, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் இருவரும் உடல் கருகி உயிரிழந்த நிலையில், தன்மீதும் தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் 70 சதவீதம் அளவுக்கு தீக்காயம் அடைந்துள்ள சகரியா, சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே மகனின் திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தந்தை வெறிச் செயலில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்