தமிழ்நாடு

மனைவி, மகனை எரித்துக் கொன்ற முதியவர்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் சகரியா. 60 வயதான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு, சொந்த ஊரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும், கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி மெர்சியுடன் பேச்சுவார்த்தை இல்லாமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், சில தினங்களுக்கு முன்பு, சகரியாவின் மூத்த மகன் வென்றிக்கு, திருமணம் நடந்திருக்கிறது. இதில் சகரியாவுக்கு உடன்பாடு இல்லாததால், திருமணத்திற்கு செல்லவில்லை என தெரிகிறது. மேலும், மனைவி மெர்சியுடன் சகரியா தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். குறிப்பாக, சம்பவத்தன்று மனைவியுடன் சண்டையிட்ட சகரியா, மனைவி மற்றும் சண்டையை தடுக்க வந்த இளைய மகன் ஹார்லி வினோ மீது, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் இருவரும் உடல் கருகி உயிரிழந்த நிலையில், தன்மீதும் தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் 70 சதவீதம் அளவுக்கு தீக்காயம் அடைந்துள்ள சகரியா, சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே மகனின் திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் தந்தை வெறிச் செயலில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை