தமிழ்நாடு

நடக்க முடியாமல் மனு அளிக்க வந்த மூதாட்டி - கருணை காட்டிய கோவை மாநகர காவல்துறை

நடக்க முடியாத நிலையில்,கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டியிடம் துணை ஆணையரே மனுவை வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
நடக்க முடியாத நிலையில்,கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டியிடம், துணை ஆணையரே மனுவை வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த 86 வயதான ரங்கம்மாள், புகார் அளிக்க ஆணையர் அலுவலகம் வந்தார். இதையறித்த காவலர்கள் துணை ஆணையருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த துணை ஆணையர், நுழைவாயிலிலே மூதாட்டியிடம் மனுவை பெற்றுக்கொண்டார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்