தமிழ்நாடு

அரிசி ஆலைக்கு அனுமதி தர லஞ்சம் பெற்ற அதிகாரி கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் அரிசி ஆலைக்கு அனுமதி தர லஞ்சம் பெற்ற அதிகாரி கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டத்தில் அரிசி ஆலைக்கு அனுமதி தர லஞ்சம் பெற்ற அதிகாரி கைது செய்யப்பட்டார். திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜகோபால், அரிசி ஆலை அமைக்க வரைபட அனுமதிக்காக பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். இதனை பரிசீலித்த செயல் அலுவலர் ஜானகிராமன் அரிசி ஆலைக்கு அனுமதி வழங்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் சிவபாதசேகரிடம் ராஜகோபால் புகார் செய்தார். அதன் அடிப்படையில், பேருராட்சி செயல் அலுவலர் ஜானகிராமன், அவரது உதவியாளர் பரந்தாமன் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி