தமிழ்நாடு

அரிசி ஆலைக்கு அனுமதி தர லஞ்சம் பெற்ற அதிகாரி கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் அரிசி ஆலைக்கு அனுமதி தர லஞ்சம் பெற்ற அதிகாரி கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டத்தில் அரிசி ஆலைக்கு அனுமதி தர லஞ்சம் பெற்ற அதிகாரி கைது செய்யப்பட்டார். திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜகோபால், அரிசி ஆலை அமைக்க வரைபட அனுமதிக்காக பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். இதனை பரிசீலித்த செயல் அலுவலர் ஜானகிராமன் அரிசி ஆலைக்கு அனுமதி வழங்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் சிவபாதசேகரிடம் ராஜகோபால் புகார் செய்தார். அதன் அடிப்படையில், பேருராட்சி செயல் அலுவலர் ஜானகிராமன், அவரது உதவியாளர் பரந்தாமன் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்