தமிழ்நாடு

மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு- ரூ.5 கோடி வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பன்னீர் செல்வம் நன்றி

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக அட்சய பாத்திர அமைப்பின் சமையல்கூடம் பூமி பூஜை விழா நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக அட்சய பாத்திர அமைப்பின் சமையல்கூடம் பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, சத்துணவினால் 5 லட்சம் மாணவpர்கள் பயன்பெறுவதாக குறிப்பிட்டார். இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சாதி மத வேறுபாடு இன்றி சேவையாற்றி வரும் அக்‌ஷய பாத்திரா அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமையளிப்பதாக குறிப்பிட்டார். மேலும், இத்திட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் 5 கோடி ரூபாய் வழங்கியதற்கு துணை முதலமைச்சர் நன்றி ​தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி