சென்னை கொளத்தூரில், செவிலியர்கள் தங்கியிருந்த வீட்டின் குளியலறையில் ரகசியமாக வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். 46 வயது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை பகுதியைச் சேர்ந்த 37 வயது சத்யராஜ் என்பவர் செவிலியர்களின் தங்கியிருந்த வீட்டின் குளியலறை ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.