தமிழ்நாடு

என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீட்டில் சோதனை

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

தந்தி டிவி

புதுச்சேரி மாநிலத்தில், மக்களவை மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், திலாஸ்பேட்டையில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீட்டில், 5 பேர் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இதில், வீடு முழுவதும் உள்ள அறைகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை, சுமார் அரை மணி நேரம், பறக்கும் படையினர் சோதனை செய்தனர். சோதனை முடிந்து, தேர்தல் பறக்கும் படையினர் சென்ற உடன், வருமானவரித்துறையினரும் அங்கு வந்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM