சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் தான் முதன் முதலாக என்.பி.ஆர் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டதாக தெரிவித்தார். 2020 இல் மூன்று புதிய கேள்விகள் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். இதுதொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாவும், ஆனால் இதுவரை பதில் வரவில்லை என்றும் அவர் கூறினார். எனவே தமிழகத்தில் என்பிஆர் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.