எல்லை மீறிய வடமாநில டிரைவர் - போலீஸ் கஸ்டடியில் சீன் டோட்டல் டேமேஜ்
வாகனத் தணிக்கை - அடாவடி செய்த லாரி ஓட்டுநர் கைது திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் மாநில எல்லையில், வாகனத் தணிக்கையை ஃபேஸ்புக்கில் நேரலை செய்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். தணிக்கையை வீடியோ எடுத்தது குறித்து போக்குவரத்துத் துறை ஊழியர்கள் தட்டிக் கேட்டபோது, ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர் ஷம்பால், அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் தடுப்புகளை கீழே தள்ளி அடாவடியில் ஈடுபட்டிருக்கிறார். இதுகுறித்து போக்குவரத்துத் துறையினர் அளித்த புகாரின் பேரில், ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் ஷம்பாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.