மலப்புரத்தில் 6-ம் வகுப்பு மாணவனை தாக்கிய வடமாநில தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர். கேரளா மாநிலம் மலப்புரம் அம்பலவலம் பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவன் அஸ்வின். கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்வின் டயர் ஓட்டி விளையாடும்போது, அதே பகுதியில் வசித்து வரும் வடமாநில தொழிலாளி சலீம் என்பவர் மீது மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த சலீம் மாணவனின் கழுத்தை நெரித்து கட்டையால் தாக்கியதில், காயமடைந்த அஸ்வின் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். இதுகுறித்து, மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சலீமை போலீசார் தேடி வருகின்றனர்