சட்டமன்ற இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்று இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் கூறினார். குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த தேர்தலோடு மக்கள் நீதி மய்யத்துடன் உறவை முறித்துக் கொண்டோம் என்று கூறினார். தமிழகத்தில் இடைத்தேர்தல் என்பது திருமங்கலம் ஃபார்முலா என தேசிய அளவில் பேசப்படுவதாகவும் அதனால் வருகிற இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.