தமிழ்நாடு

"நாளை மழை பெய்தால் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை" - வனத்துறையினர் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நாளை மழை பெய்தால், சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நாளை மழை பெய்தால், சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மாதம் தோறும், அமாவாசை, பெளர்ணமிக்கு 4 நாட்கள் வீதம் மொத்தம் 8 நாட்கள் மட்டுமே, சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், நாளை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு மழை பெய்தால், கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்