தமிழ்நாடு

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முல்லை பெரியாறில் புதிய அணை இல்லை - கேரள அரசு உத்தரவாதம்

தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

தந்தி டிவி

* முல்லை பெரியாற்றில் கேரள அரசு புதிய அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளித்ததை எதிர்த்த மனு மற்றும்,உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய மத்திய அரசு, கேரள அரசு மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு உள்ளிட்டவை மீதான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

* அப்போது, ஆய்வறிக்கை தயாரிக்க தரவுகளை திரட்டும் பணி மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அணை கட்டுவதற்கான ஒப்புதல் வழங்கப்படவில்லை என்றும் கேரள அரசு சார்பில் தெரிவிக்கபட்டது.

* இதனையடுத்து, மத்திய அரசு கேரளாவிற்கு, விரிவான திட்ட ஆய்வறிக்கை தயாரிக்க கொடுத்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

* அதனைதொடர்ந்து, தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட மாட்டோம் என்று கேரள அரசு சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி