Patta Chitta | "இனி கவலையே இல்ல.." பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. ரெடியான புதிய வசதி #tngovt #pattachitta #Onlineservice #thanthitv தமிழகத்தில் ஒருங்கிணைந்த நில ஆவண இணைய சேவை அறிமுகம் தமிழகத்தில் நில ஆவணங்களை எளிதாகப் பெறும் வகையில், "ஒருங்கிணைந்த நில ஆவணம்" (Integrated Land Document) மற்றும் "முந்தைய பட்டா மாறுதல் விவர அறிக்கை" ஆகிய புதிய இணையவழிச் சேவைகளை வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று (04-03-2026) தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் பட்டா, சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அ-பதிவேடு ஆகிய அனைத்தையும் ஒரே ஆவணமாக இனி மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், ஒரு நிலத்தின் முந்தைய உரிமையாளர்கள் யார், எப்போது பட்டா மாறியது போன்ற வரலாற்றை, இணையதளம் வாயிலாக எளிதாக சரிபார்க்கும் வசதியும் அறிமுகமாகிறது. நில விற்பனை மற்றும் எல்லைத் தகராறுகளுக்கு இந்த புதிய முறை முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.