தமிழ்நாடு

பெரும் இழுபறியிலும் எட்டப்படாத முடிவு - பேச்சுவார்த்தை ஒத்தி வைப்பு

தந்தி டிவி

பெரும் இழுபறியிலும் எட்டப்படாத முடிவு - பேச்சுவார்த்தை ஒத்தி வைப்பு

சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில், கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது...நிலுவையில் உள்ள பஞ்சபடியை வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, போக்குவரத்து தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே 6 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், ஏழாம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாததால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதில், அண்ணா தொழிற்சங்கம், சிஐடியூ உள்ளிட்ட 27 தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.....

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்