தமிழ்நாடு

விசாரணைக்கு வரும் NLC விவகாரம்- இரவு-பகலாக தொடரும் பணிகள்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே, என்.எல்.சி. நிறுவனம் இரவு-பகலாக கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில், நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. விளைநிலங்களை அழித்து கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாக, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையும் மீறி பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பரவனாறு வடிகால் கால்வாய் அமைக்கும் பணி 6-வது நாளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக இரவு-பகலாக இப்பணிகள் நடைபெறும் நிலையில், இரவு நேரத்தில் பணிகள் நடைபெறும்போது வயல்வெளிகள் அழிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே, உயர்நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் இப்பணிகளை முடிக்க என்.எல்.சி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை