தமிழ்நாடு

என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து 6 பேர் உயிரிழந்த விபத்து - நிவாரணம் வழங்கி அமைச்சர் எம்.சி. சம்பத் ஆறுதல்

என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினரிடம் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண காசோலை வழங்கப்பட்டது.

தந்தி டிவி
என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினரிடம் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண காசோலை வழங்கப்பட்டது. கடந்த ஒன்றாம் தேதி நடந்த விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 17 பேர், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழந்த, என்.எல்.சி. தொழிலாளர்கள், சிலம்பரசன், வெங்கடேசபெருமாள், பத்மநாபன், அருண்குமார், நாகராஜன், ராமநாதன் ஆகிய 6 பேருக்கும், முதலமைச்சர் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். நெய்வேலியில் நடந்த நிகழ்ச்சியில், உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயை அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்கினார். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு