தமிழ்நாடு

என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து 6 பேர் உயிரிழந்த விபத்து - நிவாரணம் வழங்கி அமைச்சர் எம்.சி. சம்பத் ஆறுதல்

என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினரிடம் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண காசோலை வழங்கப்பட்டது.

தந்தி டிவி
என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினரிடம் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண காசோலை வழங்கப்பட்டது. கடந்த ஒன்றாம் தேதி நடந்த விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 17 பேர், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழந்த, என்.எல்.சி. தொழிலாளர்கள், சிலம்பரசன், வெங்கடேசபெருமாள், பத்மநாபன், அருண்குமார், நாகராஜன், ராமநாதன் ஆகிய 6 பேருக்கும், முதலமைச்சர் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். நெய்வேலியில் நடந்த நிகழ்ச்சியில், உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயை அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்கினார். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்