தமிழ்நாடு

என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து 6 பேர் உயிரிழந்த விபத்து - நிவாரணம் வழங்கி அமைச்சர் எம்.சி. சம்பத் ஆறுதல்

என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினரிடம் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண காசோலை வழங்கப்பட்டது.

தந்தி டிவி
என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினரிடம் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண காசோலை வழங்கப்பட்டது. கடந்த ஒன்றாம் தேதி நடந்த விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 17 பேர், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழந்த, என்.எல்.சி. தொழிலாளர்கள், சிலம்பரசன், வெங்கடேசபெருமாள், பத்மநாபன், அருண்குமார், நாகராஜன், ராமநாதன் ஆகிய 6 பேருக்கும், முதலமைச்சர் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். நெய்வேலியில் நடந்த நிகழ்ச்சியில், உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயை அமைச்சர் எம்.சி. சம்பத் வழங்கினார். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி