தமிழ்நாடு

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் : நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் குறிப்பிட்ட சில சாட்சிகளை தவிர மற்றவர்களை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

* வழக்கு விசாரணையை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட மகளிர்

நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மகளிர் நீதிமன்ற நீதிபதி லியாகத் அலி முன்பு விசாரணைக்கு வந்த போது 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

* இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, மொத்தமுள்ள 145 சாட்சிகளில் 2 முதல் 32 வரை உள்ள சாட்சிகளாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் இருப்பதாகவும், அவர்களை மூடிய நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றார்.

* ஒன்றாவது மற்றும் 33வது சாட்சி மற்றும் அதற்கு அடுத்துள்ள சாட்சிகளை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்