தமிழ்நாடு

மாணவிகளை தவறாக வழிநடத்திய விவகாரம் : நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் குறிப்பிட்ட சில சாட்சிகளை தவிர மற்றவர்களை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

* வழக்கு விசாரணையை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட மகளிர்

நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மகளிர் நீதிமன்ற நீதிபதி லியாகத் அலி முன்பு விசாரணைக்கு வந்த போது 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

* இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, மொத்தமுள்ள 145 சாட்சிகளில் 2 முதல் 32 வரை உள்ள சாட்சிகளாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் இருப்பதாகவும், அவர்களை மூடிய நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றார்.

* ஒன்றாவது மற்றும் 33வது சாட்சி மற்றும் அதற்கு அடுத்துள்ள சாட்சிகளை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்