கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். தனியார் கல்லூரி செயலாளர் ராமசாமியிடம் மூடிய அறையில் விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 27 ஆம் தேதி மீண்டும் 3 பேரும் ஆஜராகும் படி உத்தரவிட்டனர்.