தமிழ்நாடு

குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம், இல்லை : மகிளா நீதிமன்றத்தில் நிர்மலா தேவி மனுத்தாக்கல்

அரசு தரப்பில் தங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம், இல்லை என்றும், தம்மை விடுவிக்க வேண்டும் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நிர்மலா தேவி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளிடம், தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலாதேவி,உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். முன்னதாக, வழக்கிலிருந்து விடுவிக்க கோரி உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், நிர்மலா தேவி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பாக, செவ்வாய்க்கிழமை 3 பேரும் மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும், அன்றைய தினமே, மனு மீதான விசாரணை நடைபெறும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்