தமிழ்நாடு

சாலை மற்றும் சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் நிலோபர் கபில் தகவல்

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு கூட்டம் சென்னை செனாய் நகரில் நடைபெற்றது.

தந்தி டிவி

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு கூட்டம் சென்னை செனாய் நகரில் நடைபெற்றது. குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளோடு, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள் பரிசு வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. குழந்தை தொழிலாளர் முறையை தடுக்க, சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், சாலை ஓரங்களில், போக்குவரத்து சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி