நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி யானைகளுக்கு அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன. யானைகளை குளிப்பாட்டிய பாகன்கள் அதற்கு மாலை உள்ளிட்டவற்றை அணிவித்து அழகுபடுத்தினர். தொடர்ந்து, கிருஷ்ணன் என்ற வளர்ப்பு யானை இருகால்களையும், துதிக்கையையும் உயர்த்தி கோவிலை சுற்றி வந்து விநாயகரை வழிபட்டது.