Nilgiris | Wild Elephant | காட்டுயானை தாக்கி பலியான சம்பவம் | வனத்துறையினரை மக்கள் தாக்கியதால் பரபரப்பு
கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு - பரபரப்பு விசாரிக்க சென்ற வனத்துறையினர் - பொதுமக்களிடையே வாக்குவாதம் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், ஆத்திரத்தில் வனத்துறையினரை தாக்கி பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது... ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட ஆரோப்பாறை பகுதியை சேர்ந்த ரவி என்பவர் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, பொதுமக்கள் மற்றும் வனத்துறையினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வனத்துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், 7 வனத்துறை ஊழியர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கூடலூர் அரசு மருத்துவமனை மற்றும் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்