தமிழ்நாடு

உறுதியான நிஃபா வைரஸ் மற்றும் குரங்கம்மை பாதிப்பு.. ருத்துவ ஆய்வு நடைபெறாததால் மக்கள் அதிருப்தி

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே நாடுகாணி சோதனை சாவடியில் மருத்துவ ஆய்வு நடைபெறாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் நிஃபா வைரஸ் மற்றும் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் மருத்துவ குழுவினரின் ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், நாடுகாணி சோதனைச் சாவடியில் நகராட்சி துறை அதிகாரிகள் மட்டுமே வாகன தணிக்கையில் ஈடுபட்டதால், அப்பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி மருத்துவ குழுவினரின் ஆய்வும் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி