தமிழ்நாடு

நீலகிரியில் தொடரும் கனமழை : மாயார் அருவிக்கு செல்ல வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்

நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள மாயார் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள மாயார் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, ஊட்டி உள்ளிட்ட பல இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. முழு கொள்ளவை எட்டியுள்ளதால், பைகாரா அணைக்கட்டில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், மசினகுடி, மாயார், தெப்பக்காடு, தெங்கமராட்டா ஆகிய பகுதிகளில் கரையோரம் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாயார் நீர்வீழ்ச்சிக்கு, மீன்பிடிக்கவோ, குளிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ மக்கள் செல்ல வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கேட்டுகொண்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்