தமிழ்நாடு

நீலகிரியில் தொடரும் கனமழை : மாயார் அருவிக்கு செல்ல வேண்டாம் - மாவட்ட ஆட்சியர்

நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள மாயார் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள மாயார் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தின் அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, ஊட்டி உள்ளிட்ட பல இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. முழு கொள்ளவை எட்டியுள்ளதால், பைகாரா அணைக்கட்டில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், மசினகுடி, மாயார், தெப்பக்காடு, தெங்கமராட்டா ஆகிய பகுதிகளில் கரையோரம் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாயார் நீர்வீழ்ச்சிக்கு, மீன்பிடிக்கவோ, குளிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ மக்கள் செல்ல வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கேட்டுகொண்டார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?