தமிழ்நாடு

குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடி - வாகனஒட்டிகள், பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

தந்தி டிவி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. பகல்நேரங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் இரவில் குடியிருப்பு மற்றும் சாலையில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கோத்தகிரி கேசலாடா கிராமத்திற்கு செல்லும் சாலையில் இரவில் கரடி உலா வந்ததை கண்ட வாகன ஒட்டிகள் அச்சம் அடைந்தனர். வனத்துறையினர் கரடியை கண்காணித்து வேறு பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்