தமிழ்நாடு

யானை வழித்தடங்களில் உள்ள கட்டடங்களை ஆய்வுசெய்ய குழு

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை ஆய்வுசெய்வதற்கான குழுவின் உறுப்பினர்களை இறுதிசெய்ய, உச்சநீதிமன்றம் ஒரு நாள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

தந்தி டிவி
நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் உள்ள கட்டிடங்களை ஆய்வுசெய்வதற்கான குழுவின் உறுப்பினர்களை இறுதிசெய்ய, உச்சநீதிமன்றம் ஒரு நாள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. விதிமீறல் கட்டிடங்களை ஆய்வுசெய்து நிவாரணம் வழங்குவது தொடர்பாக அறிக்கை தர 3 நபர் குழுவினை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அந்த குழுவில் இடம்பெறும் நபர்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு மனுதாரர், எதிர் மனுதாரர் உள்ளிட்டோருக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், உறுப்பினர்கள் பெயரை இறுதிசெய்ய கால அவகாசம் கோரிப்பட்ட நிலையில், அதனை ஏற்று தலைமை நீதிபதி ஒரு நாள் அவகாசம் வழங்கினார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு