தமிழ்நாடு

என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து காவல்துறை ஆணையரிடம் மனு

என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தனர்.

தந்தி டிவி

என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தனர். கோவையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் உக்கடம், கரும்புக்கடை, அன்பு நகர் உள்பட 7 இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து 6 பேரை கைது செய்தனர். அதில் சிலருக்கு இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து செல்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்செய்ய​ப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்பினர் காவல்துறை ஆணையாளர் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் அரசியல் காரணங்களுக்காக என்.ஐ.ஏ. அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், அந்த அமைப்பு ஊடகங்களுக்கு தொடர்ந்து தவறான தகவல்களை அதிகாரிகள் அளிப்பதாகவும் இஸ்லாமிய அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்