தமிழ்நாடு

என்.ஐ.ஏ-வால் இருவர் கைது - சட்டம், ஒழுங்கை பாதிக்கும் - ஹெச்.ராஜா

பயங்கராவாத அமைப்பை சேர்ந்தவர் என என்.ஐ.ஏ இருவரை கைது செய்திருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கக்கூடும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பயங்கராவாத அமைப்பை சேர்ந்தவர் என என்.ஐ.ஏ இருவரை கைது செய்திருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கக்கூடும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். பழனியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட பின்

செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், பொன்.மாணிக்கவேலுக்கு அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, இந்து அறநிலையத்துறை சட்டப்படி கோவிலில் உள்ள சொத்துக்கள், பொருட்கள் குறித்த தகவலை பராமரிக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்த ஹெச்.ராஜா, அமைச்சர் மாபா பாண்டியராஜன் சிலை எந்த கோவிலின் சிலை என்பது தெரியாது என்று எவ்வாறு கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்