தமிழ்நாடு

என்.ஐ.ஏ-வால் இருவர் கைது - சட்டம், ஒழுங்கை பாதிக்கும் - ஹெச்.ராஜா

பயங்கராவாத அமைப்பை சேர்ந்தவர் என என்.ஐ.ஏ இருவரை கைது செய்திருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கக்கூடும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பயங்கராவாத அமைப்பை சேர்ந்தவர் என என்.ஐ.ஏ இருவரை கைது செய்திருப்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கக்கூடும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். பழனியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட பின்

செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், பொன்.மாணிக்கவேலுக்கு அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, இந்து அறநிலையத்துறை சட்டப்படி கோவிலில் உள்ள சொத்துக்கள், பொருட்கள் குறித்த தகவலை பராமரிக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்த ஹெச்.ராஜா, அமைச்சர் மாபா பாண்டியராஜன் சிலை எந்த கோவிலின் சிலை என்பது தெரியாது என்று எவ்வாறு கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?