தமிழ்நாடு

ஸ்டெர்லைட் விவகாரம் - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் வசம் ஒப்படைக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் வசம் ஒப்படைக்க, தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை, பசுமை தீர்ப்பாய நீதிபதி ஏ.கே. கோயல் விசாரித்து வருகிறார். இன்றைய விசாரணையின் போது, வழக்கை ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரிடம் ஒப்படைப்பதாக நீதிபதி ஏ.கே கோயல் தெரிவித்தார். இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள் சிவசுப்ரமணியன், மற்றும் சந்துரு ஆகியோரது பெயரையும் நீதிபதி முன்மொழிந்தார்.

தமிழக அரசு தரப்பில், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவை விசாரணை அதிகாரியாக ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, வேதாந்தா குழுமத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம், வேறொரு வழக்கில் ஆஜராவதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளதால், விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது, ஸ்டெர்லைட்டில் இருந்து காப்பர் கழிவுகள் கொட்டப்படுவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையை கவனத்தில் கொண்ட நீதிபதி, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும் என உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை