Madurai || மாவட்டந்தோறும் செய்தி சேனல்கள் கோரிய வழக்கு -அரசுகள் பதிலளிக்க உத்தரவு இந்தியாவின் 766 மாவட்டங்களிலும் மத்திய அரசின் மாவட்ட செய்தி சேனல்களை உருவாக்கக் கோரிய பொதுநல வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு, இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். #MaduraiHighCourt #MaduraiBench #DistrictNewsChannels #PublicInterestLitigation