தமிழ்நாடு

புதிய அரிசி குடும்ப அட்டை பெற்றுள்ளவர்கள்; கொரோனா நிவாரண நிதி ரூ.4000 வழங்கப்படும் - மு.க. ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் புதிதாக அரிசி குடும்ப அட்டை பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் புதிதாக அரிசி குடும்ப அட்டை பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழக அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ள நிலையில், இதற்கான முதல் தவணை தொகையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிதாக அரிசி குடும்ப அட்டை பெற்றுள்ளவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், 2 லட்சத்து 14 ஆயிரத்து 950, புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், மே மாதம் 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என்றும் இதற்காக 42 கோடியே 99 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்