தமிழ்நாடு

நடிகர் சங்கத் தேர்தல் - தனி நீதிபதி உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலை ரத்து செய்து தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக விஷால் தரப்பில் இந்த மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சங்க பிரச்சினையில், நடுநிலையோடு செயல்படவில்லை என்றும், எந்த ஒரு சட்ட ரீதியான அம்சத்தையும் ஆராயாமல் தனி நீதிபதி இந்த தேர்தலை ரத்து செய்துள்ளதாகவும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 12ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்