தமிழ்நாடு

முதலமைச்சருடன் புதிய எம்.எல்.ஏக்கள் சந்திப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற புதிய எம்.எல்.ஏக்கள், சேலத்தில் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தந்தி டிவி
தமிழகத்தில், நடந்த முடிந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் தி.மு.க வசம் இருந்த இரண்டு தொகுதிகளையும் அ.தி.மு.க கைப்பற்றியது. இதையடுத்து நாங்குநேரி எம்.எல்.ஏ நாராயணன், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சேலத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது இரண்டு எம்.எல்.ஏக்களும் முதலமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி தங்களது மரியாதையை வெளிப்படுத்தினர். பின்னர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை முதலமைச்சரிடம் காட்டி புதிய எம்.எல்.ஏக்கள் வாழ்த்து பெற்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்