தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகள் : எம்.பி.பி.எஸ் இடங்கள் 5,000 ஆக உயர்வு

தமிழகத்தில் புதிதாக ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட அனுமதி கிடைத்திருப்பதன் மூலம், எம்.பி.பி.எஸ் இடங்கள் 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி
ஒரே ஆண்டில், ஒன்பது மருத்துவக் கல்லுாரிகள் துவக்க அனுமதி கிடைத்துள்ளதால், தமிழக அரசு மருத்துவக் கல்லூகளின் எண்ணிக்கை, 26ல் இருந்து 35 ஆக உயர்கிறது. ஒவ்வொரு கல்லூரிக்கும் 150 இடங்களுக்கு அனுமதி கொண்டுள்ளதால், கூடுதலாக, ஆயிரத்து 350 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 5 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளது. நாட்டிலேயே, அதிக அரசு மருத்துவக் கல்லுாரிகள் கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. மேலும், முதல்கட்டமாக வரும் கல்வியாண்டில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு ஒதுக்கப்படலாம் என்ற பேச்சும் மருத்துவக் கல்வி வட்டாரங்களில் அடிபடுகிறது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை