தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகள் : எம்.பி.பி.எஸ் இடங்கள் 5,000 ஆக உயர்வு

தமிழகத்தில் புதிதாக ஒன்பது மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட அனுமதி கிடைத்திருப்பதன் மூலம், எம்.பி.பி.எஸ் இடங்கள் 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி
ஒரே ஆண்டில், ஒன்பது மருத்துவக் கல்லுாரிகள் துவக்க அனுமதி கிடைத்துள்ளதால், தமிழக அரசு மருத்துவக் கல்லூகளின் எண்ணிக்கை, 26ல் இருந்து 35 ஆக உயர்கிறது. ஒவ்வொரு கல்லூரிக்கும் 150 இடங்களுக்கு அனுமதி கொண்டுள்ளதால், கூடுதலாக, ஆயிரத்து 350 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 5 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளது. நாட்டிலேயே, அதிக அரசு மருத்துவக் கல்லுாரிகள் கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. மேலும், முதல்கட்டமாக வரும் கல்வியாண்டில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு மருத்துவப் படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு ஒதுக்கப்படலாம் என்ற பேச்சும் மருத்துவக் கல்வி வட்டாரங்களில் அடிபடுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்