தமிழ்நாடு

ரூ. 388 கோடியில் முக்கொம்பில் புதிய அணை

திருச்சி - கொள்ளிடம் ஆற்றின் முக்கொம்பில், இடிந்த மேலணைக்கு பதிலாக 388 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
திருச்சி - கொள்ளிடம் ஆற்றின் முக்கொம்பில், இடிந்த மேலணைக்கு பதிலாக 388 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த ஜூலை , ஆகஸ்டு மாதங்களில் காவேரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக உபரி நீரை வெளியேற்றிய போது, ஆகஸ்ட் 22 ம் தேதி, 9 கதவணைகள் உடைந்தன. 1836 - ல் சர் ஆர்தர் தாமஸ் காட்டன் என்ற இங்கிலாந்து பொறியாளரால் கட்டப்பட்ட 182 ஆண்டு பழமை வாய்ந்த மேலணைக்கு பதிலாக புதிய அணை கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே உறுதி அளித்திருந்தார். இதன்படி, தற்போது, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த புதிய அணையில் இருந்து 2 லட்சத்து 83 ஆயிரம் கன அடி நீரை பாதுகாப்பாக வெளியேற்ற முடியும். இதுதவிர, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 12 லட்சத்து 58 ஆயிரத்து 460 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை