தமிழ்நாடு

புதிய பாலத்தில் பழுது - அச்சத்தில் பொதுமக்கள்

தந்தி டிவி

இரண்டு மாவட்டங்களை இணைக்கும் வகையிலும், கல்லணை வழியாக கனரக வாகனங்கள் செல்லும் வகையிலும், கல்லணை கொள்ளிட ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக, கடந்த 2016-ஆம் ஆண்டு, அப்போதைய அதிமுக ஆட்சிக்காலத்தில் 67 கோடி ரூபாய் செலவில் பூமி பூஜை நடத்தப்பட்டு, பாலம் கட்டப்பட்டது. இதனால், தங்கள் நீண்ட கோரிக்கை நிறைவேறி விட்டதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், கட்டுமானப் பணியின்போது, தூண்களில் விரிசல் ஏற்பட்டு சீரமைக்கப்பட்டதுடன், தற்போது காங்கிரீட் தளமும் பெயர்ந்து வருகிறது. இதனால், வேதனை அடைந்துள்ள அந்த பகுதி, பாலத்தை உடனடியாக சீரமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே, பாலத்தை கட்டிய ஒப்பந்ததாரரிடம் 2 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், பாலத்தை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தஞ்சை நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறியுள்ளார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை