தமிழ்நாடு

சுகாதாரத்துறையில் புதிதாக 5,224 பேர் நியமனம் - நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர்

சுகாதாரத்துறையில் புதிதாக நியமிக்கப்பட்டவர்களுள் பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக முதலமைச்சர் பழனிசாமி 10 பேருக்கு பணி ஆணையை வழங்கினார்.

தந்தி டிவி
சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, 2721 செவிலியர்கள், 1782 கிராம சுகாதார செவிலியர்கள் உள்பட மொத்தம் 5214 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு தொலைதூர கண்ணியல் வலைதளம் மற்றும் 32 கண் பரிசோதனை மையங்களை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ஆகிய நான்கு இடங்களில், அரசின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி