தமிழ்நாடு

நியூட்ரினோ திட்டம் - பிடிகொடுக்காத தமிழகம், கேரளா

தேனி நியூட்ரினோ ஆய்வு திட்டத்தில், கேரள அரசின் முடிவுக்கு பின்னரே தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கப் போவதாக தமிழக அரசு கூறியுள்ளது.

தந்தி டிவி

தேனி நியூட்ரினோ ஆய்வு திட்டத்தில், கேரள அரசின் முடிவுக்கு பின்னரே தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கப் போவதாக தமிழக அரசு கூறியுள்ளது. தேனி மாவட்டத்தில், நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இன்று ஆலோசனை நடைபெற்றது. மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் காணொலி காட்சி மூலம், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக தலைமை செயலாளர் சண்முகம், கேரள தலைமை செயலாளர் பங்கேற்றனர். அப்போது, மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலமாக அறிவிக்க கேரளா வலியுறுத்தியுள்ளது. மேலும், மதிகெட்டான் சோலையை அங்கீகரித்தால் தான், நியூட்ரினோ திட்டத்தில் முடிவெடுப்போம் என்றும் கேரளா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கேரள அரசு ஒரு முடிவை எடுத்த பின்னரே, திட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை