தமிழ்நாடு

தனியார் விடுதியில் இளைஞர் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டையை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர் ஒரு பெண்ணுடன் தங்கியுள்ளார். ரமேஷுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி அந்த பெண் விடுதியை விட்டு தலைமறைவானார். விடுதி ஊழியர்கள் வந்து பார்த்தபோது ரமேஷ் உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரமேஷுடன் வந்த பெண் யார் ?, ரமேஷுக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன உறவு ?, என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்