தமிழ்நாடு

தனியார் விடுதியில் இளைஞர் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டையை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர் ஒரு பெண்ணுடன் தங்கியுள்ளார். ரமேஷுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி அந்த பெண் விடுதியை விட்டு தலைமறைவானார். விடுதி ஊழியர்கள் வந்து பார்த்தபோது ரமேஷ் உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரமேஷுடன் வந்த பெண் யார் ?, ரமேஷுக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன உறவு ?, என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’