நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான நின்ற சீர் நெடுமாற பாண்டிய மன்னனுக்கு சுவாமி நெல்லையப்பர் செங்கோல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதை முன்னிட்டு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆயிரம்கால் மண்டபத்திற்கு எழுந்தருளினார். அப்போது, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து செங்கோல், மேளவாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமியிடம் சேர்க்கப்பட்டது.