தமிழ்நாடு

2 நாட்களுக்கு ஒரு முறை 5 குடம் தண்ணீர் மட்டுமே, நெல்லை மாநகராட்சி மக்களின் அவலநிலை

நெல்லை மாநகராட்சியின் மத்திய பகுதியான மகராஜநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.

தந்தி டிவி
நெல்லை மாநகராட்சியின் மத்திய பகுதியான மகராஜநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 5 குடம் தண்ணீர் மட்டுமே கிடைப்பதாகவும், கழிப்பறைக்கு கூட தண்ணீர் இல்லை என்றும், பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், உப்பு தண்ணீரை 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளும் அடிபம்புகளும் தண்ணீரின்றி பயனற்றுக் கிடக்கிறது. தற்போது நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தீர்வு காணவேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்