முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் சகோதரர் வெட்டிக் கொலை நெல்லை மாவட்டம் கல்லூரில் முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் சகோதரர் சண்முகவேல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நிலவுகிறது... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கொலைக்குக் காரணமானவர் எனச் சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டை இறந்தவரின் உறவினர்கள் சூறையாட முயன்றதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...