தமிழ்நாடு

முன்விரோதம் காரணமாக கொலை வன்மம் - ஜாமினில் வந்த சகோதரர்கள் வெறியாட்டம்

நெல்லை அருகே ஒரே குடும்பத்தில் மற்றொருவரை கொல்ல முயன்ற இளைஞர், கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்​தி உள்ளது.

தந்தி டிவி

நெல்லை அருகே ஒரே குடும்பத்தில் மற்றொருவரை கொல்ல முயன்ற இளைஞர், கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்​தி உள்ளது. கல்லிடைக்குறிச்சி அடுத்த செங்குளத்தில், திருவிழா தகராறு தொடர்பாக கண்ணன் என்பவரின் மகன் விஜயை, அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கண்டித்துள்ளார். இந்த விவகாரத்தில், விஜய், அவரது அண்ணன்கள் வினோத், விகாஸ் உள்ளிட்டோர், 2016ஆம் ஆண்டு தேர்தல் நாளில் ரவிச்சந்திரனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இந்த வழக்கில் சிறை சென்றவர்கள் அனைவரும் , தற்போது ஜாமீனில் வந்துள்ளனர். வாகைகுளத்துக்கு குடிபெயர்ந்த அவர்கள், சிறை செல்ல காரணமாக இருந்த ரவிச்சந்திரன் குடும்பத்தைச் சேர்ந்த சிவபிரவீனை நேற்று துரத்தியுள்ளனர். அவர் சொந்த ஊரான செங்குளத்துக்குள் சத்தமிட்டவாறு நுழைந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள், கொலையை தடுக்க கற்களால் அடித்த நிலையில், விஜய் உயிரிழந்தார். அண்ணன் விகாஸ் காயமடைந்தார். விஜயின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு