தமிழ்நாடு

நெல்லை தாய் - சேய் உயிரிழப்பு : அறிக்கை அளிக்க - சுகாதாரத்துறைக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு

பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் இறந்தது தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை அளிக்க, சுகாதார துறைக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியை சேர்ந்த அகிலா, அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. இதில் தாயும், குழந்தையும் இறந்துள்ளனர். இதுசம்பந்தமாக தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக நான்கு வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு