Nellai Mayor | Police | நெல்லை மேயர் வீடு புகுந்து மிரட்டல் | மீண்டும் வீடு தேடி வந்த நபரால் பதற்றம் நெல்லை மேயருக்கு வீடு புகுந்து கொலை மிரட்டல் - 2 பேர் கைது நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணனுக்கு, வீடு புகுந்து 2 இளைஞர்கள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இரவு நேரத்தில் மேயரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அந்த இளைஞர்கள், மேயரைத் தீர்த்துக்கட்டப் போவதாக பேசியதாக கூறப்படுகிறது.... இதனால் அதிர்ச்சியடைந்த மேயரின் குடும்பத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மேயர் வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.