தமிழ்நாடு

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு - திமுக பிரமுகர் சீனியம்மாள் கைது

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாள் மற்றும் அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

கடந்த ஜூலை 23 ஆம் தேதி நெல்லை ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர், பணிப்பெண் ஆகிய 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புள்ளதாக, கார்த்திகேயனின் தாயாரும் திமுக பிரமுகருமான சீனியம்மாளையும் அவரது கணவர் சன்னாசியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி இருந்தால் தனக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது என்பதால் அவரை தனது மகனை வைத்தே கொலை செய்ததாக சீனியம்மாள் வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை